திங்கள், 3 செப்டம்பர், 2012

ஈசா நபி விவாதம் : நௌஷாத் அலி - 2



03/09/2012




அஸ்ஸலாமு அலைக்கும்,

முன்னரே அலசப்பட்ட விவாதத்தில் சில வசனங்களின் அர்த்தத்தை  திருத்தி கொண்டீர்கள், எனில் அதுவரை அதற்கு கொடுத்த அர்த்தம் தவறானது என்பதாக தங்களுக்கே தெரிந்தது. இப்போது மீண்டும் இந்த வாய்ப்புகளில் அலசுவது இப்போது நீங்கள் கொடுக்கும் அர்த்தம்  சரியானதா என்பதை பார்ப்பதற்கு தான்.

ஹதிஷில் ஈஸா நபி வருவார் என்பதாக இருப்பதை யாரும் மறுக்கவில்லை மாறாக அது குரானோடு முரண் படுகிறது என்பதற்காகவே அது மறுக்க படுகிறது என்பதை மீண்டும் கூறி கொள்கிறேன். 

வபாத் - முழுமையாக எடுத்தல்.
இது அகராதியின் மொழி பெயர்ப்பு தான். ஒரு வார்த்தை தனித்து வரும் போது ஒரு பொருளும் , அது வாக்கியத்தில் சேரும் போது அதற்குள் வேறு ஒரு பொருள் மறைந்திருப்பதும் மொழிகளில் சகஜமானது.

மௌத் என்றால் மரணம். இப்படி மரணம் என்று இருக்க , வபாத் என்ற சொல் குரானில் எங்கெல்ல்லாம் பயன் படுத்த பட்டுள்ளது என்பதை பார்க்கும் போது அது சொல்ல வருகன்ற பொருள் குறித்து நாம் விளங்கி கொள்ள முடியும். அது போலவே ஒரு வார்த்தையின் நேரடி அர்த்தம் எதுவாயினும் அது எந்த வாக்கியத்தோடு சேர்கிறதோ , அதற்கு எது முதன்மை அர்த்தம் என்பதையும் சேர்த்தே  பார்க்க வேண்டும்.

இங்கே கைப்பற்றுதல் என்பது ஒரு உயிரோடு தொடர்பு கொண்டு வரும் போது அதற்க்கு மரணம் என்பது தான் முதல் பொருள். கூடுதல் விளக்கம் தான் மற்றவை. எனவே 
ஈஸாவே உம்மை கைப்பற்றுவேன் என்று வரும் தொடரில் , உம்மை கைப்பற்றுவேன் என்பதும் மரணத்தை தான் குறிக்கும். கூடுதல் விளக்கம் அளிக்கும் போது தான் அவர் உடலோடு கைபற்றபட்டார் என்றெல்லாம் சொல்ல முடியும்.

வபாத் என்பதற்கு மரணம் என்கிற அர்த்தம் எந்த அகராதியிலும் கிடையாது. - நாசித் 
வபாத் என்பதற்கு அகராதியில் மரணம் என்ற பொருள் கொள்ள முடியாது என்பது போலவே "இறைவா என்னை முஸ்லிமாக கைபற்று" , " உயிர்களை இறைவன் கைப்பற்றி கொண்டான் "  என்ற வாய்க்கியங்களுக்கு மரணம் என்பதை தவிர வேறு அர்த்தம் கொள்ள முடியாது.

"காலம்" என்பதன் அகராதி பொருள் என்ன ? " காலம் சென்றார்" என்ற என்பதன் பொருள் என்ன ? காலம் சென்றார் என்று சொல்லும் போது அதற்கு மரணம் தான் முதல் பொருள், மற்றவை கூடுதல் விளக்கங்கள்.

மௌத் என்ற சொல்லுக்கு மரணம் என்பது பொருள் என்றாலும் வபாத் என்று ஏன் சொல்லபட வேண்டும் என்பதாக தோன்றும். எல்லா மொழியிலும் நாம் சொல்ல வருகின்ற வாக்கியத்திக்கு ஏற்றவாறு வார்த்தையை பயன் படுத்துவதுண்டு. அதை கருத்தில் கொண்டு சிந்தித்து பார்த்தாலே போதும் இது எளிமையாகவே விளங்கும்,

மரணம் என்பது ஒரு சம்பவம்.  அந்த சம்பவத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் போது "மரணம் வரும் வேளை" , "மரணம் நெருங்கும் போது", "மரணம் வரும் வரை" என்று சொல்வதுண்டு. குரானிலும் அப்படி தான் அனைத்து இடங்களிலும் மரணம் குறித்து வருகிறது.

உயிர் கைப்பற்ற படுவதாவது மரணம் என்ற சம்பவத்தின் போது நடப்பது.  இந்த செயலுக்கு முக்கியத்துவம் கொடுக்க பட வேண்டிய இடத்தில் மரணத்திற்கு பதிலாக சில சமயம் உயிர் கைபற்றபடுவதை குறித்து சொல்லபடுவதுண்டு.

தவபா என்ற சொல் குர்ஆனில் வருகின்ற அனைத்து இடங்களிலும் பார்த்து விட்டு அதற்கு "முழுமையாக கைப்பற்றுதல்" என்று அர்த்தம் தான் உண்டு எனவே மரணம் என்று சொல்ல வேண்டிய கட்டாயம் இல்லை என்று சொல்வதே தவறு. 
எங்கெல்லாம் தபாவா என்ற சொல் ஒரு உயிரினத்தோடு சொல்லப்பட்டிருக்கிறதோ  அங்கெல்லாம் மரணத்தை தவிர வேறு அர்த்தம் கிடையாது  என்பது தான் உண்மையே.
நாம் உமை கைப்பற்றி கொண்டாலும் என்று 13 :40 இல் வருகின்ற போன்ற வசனங்கள் உதாரணம்.

எனவே ஹதிஷிர்க்கு ஏற்றவாறு ஈஸா நபி தொடர்புடைய வசனங்களில் அவரை உடலோடு உயர்த்தினான் என்று கூடுதல் விளக்கம் தரப்படுகிறது என்பது தான் உண்மை.

இல்லையேல் 3 வது சூராவில்,
"ஈஸாவே நான் உம்மை கைப்பற்றுவேன்.(உடலோடு உயர்த்தி கொள்வேன்)". என்று மட்டும் சொல்வதே கூடுமான இடத்தில் "பின்னர் என்னளவில் உன்னை உயர்த்துவேன்" என்று சொல்வது தேவையற்றதாகிவிடும். 
"ஈஸாவை எடுத்து பின்னர் உயர்த்துதல்" என்று பொருள் தரும்படி ஆகிவிடும்.

குர்ஆனில் நபிமார்கள் அனைவரும் மரணித்து விட்டதாகவும், அவர்கள் நிரந்தரமான்வர்கலாக இருக்கவில்லை என்றும், உணவருந்தாதவர்கலாக இருக்கவில்லை என்றும் சொல்கிறது. எங்கும் ஈஸா நபி விதிவிலக்காக சொல்லப்படவில்லை. மாறாக விதி விளக்காக எடுத்து கொள்ளபடுகிறார் .

ஒரு வாதத்திற்கு என்று நீங்கள் சொல்வது போல்,
ஈஸா நபி மரணித்து விட்டார் என்று எடுத்து கொண்டு பார்த்தாலும் அல்லா நாடினால் ஈஸா நபி மீண்டும் வருவார் என்று நம்பிக்கை கொண்டால் கூட பரவாஇல்லை என்று சொல்லலாம். அவர் உடலோடு தூக்கப்பட்டு பின்னர் அந்த உடலோடு மீண்டும் வருவார் என்று சொல்வது குர்ஆனில் எங்கும் இல்லாத ஒன்று. 

அது போலவே மீண்டும் வருவார் என்பதற்கு நீங்கள் கூறும்  4 :159 வசனத்தை மொழி பெயர்த்தால், இஸ்ரவேலர்கள் அனைவரும் ஈஸா நபியை பார்த்து நம்பிக்கை கொள்வார்கள் அதற்கு ஈஸா நபி சாட்சியாக இருப்பார்கள் என்பது கூட இறுதி நாளின் அடையாளங்களை கண்டு ஏற்று கொள்வபவர்களின் நம்பிக்கை பலனளிக்காது என்று நீங்கள் சுட்டி காட்டிய  ஹதிஷிர்க்கு முரணாகிறது.

ஈஸா நபி வருவது குறித்து வருகின்ற ஹதீஸ்களை குறித்து நான் எனது வாய்ப்புகளில் அறிவிப்பாளர்  தொடரை குறித்து சில லாஜிக் கேள்விகளை மட்டும் முன்  வைக்கிறேன். அறிவிப்பாளர்கள் குறித்து, நான் கேள்விப்பட்ட  விமர்சனம் என்பதால் அதை குறித்து பெரிய சர்ச்சை செய்ய எனக்கு விருப்பமில்லை, இவற்றை வெறும் கேள்விகளாக எடுத்து கொண்டு அதற்கான உங்கள் பதில்களை தந்தால் போதுமானது. படிப்பவர்கள் அவரவர்கள் முடிவு செய்து கொள்ளட்டும். 

வசலாம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக